திங்கள், 7 நவம்பர், 2011

கு.ம.ரா…..




குருவி மலை ராசேந்திரன்
இவன்
ஒருதலையாய் காதலித்தான்
ஒருத்தரையா காதலித்தான்!

நட்பாய் இருந்த இருவரையுமே

தவறென்று உணர்த்த தவறினேன்
அதனால் தான்
தவறுக்கு தண்டனையாய்
நட்புக்கு விடை கொடுத்தான்!

வீணாகிறதே காலம் என்றவன்,
எப்படித்தான் அடிமையானானோ
வீணாவதற்காகவே…!

தோழியை காதலியாக எண்ணுபவன் மடையன்
என்றான்

மடத்தனம் செய்துகொண்டிருக்கும்
மடையனாக,
அதைக்கேட்டதால்,
கூடாநட்பென்று,
உதறிவிட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக