திங்கள், 7 நவம்பர், 2011

வினோத்




வெண்ணையாய்
திரண்டுவரும்
அன்புள்ளம்,
ஆனால்
தொண்ணையாய்
என் நட்பு
பறந்து விட்டதாலோ என்னவோ
உருகிவிட்டான்
ஒரு மங்கையின் பேச்சால்!

ஒவ்வொரு முறையும்
கிண்டலும் கேளியும் தான்
அதை கண்டுகொள்ளாத
நட்புள்ளம் அவன் இதயம் தான்!

வீடெல்லாம் சைவமெனினும்
எங்களுடன் அசைவம் மட்டுமே,
மாலையில்  எங்களுக்காக
சூடான டீயுடன் போண்டா,
எப்பொழுதும் அவனே கணக்கு முடிப்பான்,
ஒருநாள்
என் நட்பையும் சேர்த்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக