எனக்கு காலேஜ்ல முதல்நாளே, ஒரு மாதிரியா இருந்துச்சு. ஏன்னு தெரியல, திடீர்னு உமா இங்லீஷ்ல பேச ஆரம்பிச்சா. ரொம்ப பயந்துட்டேன், இங்கிலீஷ்னா அவ்ளோ பயம்…வெறும் 26எழுத்த வச்சிக்கிட்டு என்ன ஆட்டம்போடுது பாருங்க.
அவ என்ன பேசினாலும் என்னுடைய பதில் ஒரு சின்ன சிரிப்பு அடுத்து எஸ்கேப். ஒருநாள் வகையா மாட்டிக்கிட்டேன்..
Hai velu, what happen to you da> னு தான் கேட்டா.. அவ பேசுறதே புரியாதுங்கறதால என்ன பேசுறானே கவனிக்காம, ட்க்னு ,இதோ பார் உமா… நீ தமிழ் நல்லாதான பேசுற அப்படியே பேசுனு சொன்னேன்…
அப்ப அவ சாதாரணமா தமிழ்ல பேசினப்ப ரொம்ப இனிமையா இருந்துச்சு, அவ பேசுன தமிழால இல்ல, நான் ஆங்கிலத்துல இருந்து தப்பிச்சதால…
ஏதோ ஒரு சாய்பாபா செண்டர் ல இலவசமா ஆங்கில வகுப்பு நடத்துறாங்க போடானு உமா தான் சேத்துவிட்டா. தாம்பரத்துல தனியா எப்படி போறதுனு யோசிச்சப்ப வினோத் என் கூட வரேனு சொன்னான். வெண்ணை திரண்டு வர்ர நேரத்துல தாழிய ஏன் உடைக்கனும்னு நானும் சந்தோஷமா போனேங்க.
ஏன் தெரியுமா ? என் கூட படிச்ச அத்தனை பேருமே ஆங்கில வழியில் படிச்சவங்கதான் . அங்க போனப்ப வினோத் அவ்ளோ நல்லா ஆங்கிலத்தில் பேசினான்…எனக்கே வியப்பா இருந்துச்சு . அதனால
அவன வேற வகுப்புலயும் என்னை அடிப்படைப் பாடத்துலயும் அந்த சென்டர்ல பிரிச்சிட்டாங்க…
ஒரு வழியா 3மாசம் படிச்சதால் ஓரளவுக்கு பயிற்சி கிடைச்சது..
இப்பவும் நான் ஓரளவுக்கு ஆங்கில அறிவு இருக்குறதா நினைச்சேன்னா , என் தோழி உமா க்கு தான் முதல் நன்றி சொல்வேன்.